Month: June 2025

அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து தஞ்சாவூர் கிளை உறுப்பினர் சந்திப்பு கூட்டம் 28/06/25 மாலை 6.30 முதல் 8.00 மணி வரை தஞ்சை கலைவாணி மன்றத்தில் துணைத் தலைவர் ஜெகஜீவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தமிழ்நாட்டில் இந்திய ரயில்வேதுறை பயணியர்களுக்கு செய்யும் சேவைகளில் ஏபிஜிபியின் பங்கு குறித்து விவாதிக்கப் பட்டது. தஞ்சாவூர் விழுப்புரம் இரட்டை ரயில் பாதை விரைவில் அமைக்க ரயில்வே அதிகாரிகளுக்கு மீண்டும் கோரிக்கை மனு அனுப்ப முடிவெடுக்கப்பட்டது மதுரையில் கடந்த 22/06/25 நடந்த தென் தமிழ்நாடு நிர்வாகிகள் கூட்டத்தில்,திரு விவேகானந்தன் ஜி தேசிய இணைச் செயலாளர் அவர்கள் தலைமையில் நடந்தபோது, நம் இயக்கத்தின் பாடல் பாடிய பின் ,பக்கத்து மாவட்டங்களில், தாலுகாக்களில் நமது நுகர்வோர் இயக்க கிளை விரிவாக்கம் குறித்து திரு விவேகானந்தன் ஜி, திரு சத்தியபாலன் ஜி தென் தமிழ்நாடு அமைப்பாளர் அவர்கள் வழங்கிய ஆலோசனைகள் பற்றி ஜெகஜீவன்ஜி துணைத் தலைவர் தென் தமிழ்நாடு விரிவாக விளக்கி பேசினார்.அனைவரும் ஏபிஜிபி கிளை வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதி அளித்தார்கள்.அடுத்த கூட்டம் ஜுலை மூன்றாம் சனிக்கிழமை19/07/25 அன்று நடைபெறும் என்று தீர்மானிக்கப் பட்டது.

அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் விழிப்புணர்வு அமைப்பு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் மாதாந்திர கூட்டம் ஜூன் 28ஆம் தேதி சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தேனி அறிமுகக் கூட்டம் இன்று ஜூன் 28ஆம் தேதி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.மேலும் இந்த கூட்டத்தில் அடுத்த அறிமுகக் கூட்டம் பெரிய அளவில் ஜூலை 26ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டது.

அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் ஆலோசனை கூட்டம்நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா குமாரபாளையம் பகுதியில் இன்று நடைபெற்றது. இதில் நமது அமைப்பை மேலும் வலுப்படுத்தவும் நடைபெற இருக்கும் முருக பக்தர் மாநாட்டில் நமது அமைப்பிலிருந்து மாநாட்டிற்கு செல்வது சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டு முருக பக்தர்களை இந்த மாநாட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. நடைபெற இருக்கும் முருக பக்தர் மாநாட்டிற்கு இரண்டு வாகனங்கள் மூலம் நமது உறுப்பினர்களை அழைத்துச் செல்வது என்று முடிவு செய்யப்பட்டது இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் சபரிநாதன் குமாரபாளையம் பொறுப்பாளர் ராஜேந்திரன் தங்கவேல் ஜெகதீசன் உதயசூரியன் வாசுதேவன் மாதேஸ்வரன் பாலகிருஷ்ணன் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் அமைப்பின் மாதாந்திர கூட்டம் (ABGP) புதுக்கோட்டையில் இன்று ஜூன் 14ஆம் தேதி சனிக்கிழமை மாநில இணை செயலாளர் திரு செல்.கனகராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் அமைப்பின் திருச்சி மாவட்டம் ஸ்ரீ ரங்கத்தில் இன்று ஜூன் 9ஆம் தேதி திங்கட்கிழமை மாலை மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.

ABGP கோவை மாவட்ட மாதாந்திர கூட்டம்1/6/2025 அன்று RS புரம் சேவாஆசிரமத்ததில் நடைபெற்றது. இதில் மாநில வல்லுநர் குழு பொறுப்பாளர் திரு.குலோத்துங்க மணியன் சிறப்புரை ஆற்றினார். மேலும் மாநில பிரச்சாரம் மற்றும் ஊடகப்பிரிவு பொறுப்பாளர் திரு.இரா.இரமேஷ் , கோவை கன்வினர் திரு.பாலமுருகன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ABGP நாகப்பட்டினம் மாதாந்திர கூட்டம் மே மாதம் 31ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற்றது இந்த கூட்டத்தில் வேளாங்கண்ணி நாகப்பட்டினம்,காரைக்கால், பேரளம், திருநள்ளாறு வழியாக தென்னக ரயில்வே சோதனை ஓட்டம் நடைபெற்றது முன்னிட்டு தென்னக ரயில்வே துறைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

You missed

ABGP தேசிய நுகர்வோர் அமைப்பு 28-09-2025புதுக்கோட்டை மாவட்டம், அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் பொன்னமராவதி தாலுகா கிளை கூட்டம் கண்டியாநத்தம் ஊராட்சியில் இன்று 28-09-2025 காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற்றது. இகூட்டத்திற்கு தாலுகா ஒருங்கிணைப்பாளர் மலைச்சாமி தலைமை வகித்தார். ஆண்டியப்பன், ராஜேந்திரன், அழகு, அருன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்.மாநில இணை செயலாளர் செல்.கனகராஜ் அமைப்பின் செயல்கள் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து உரை நிகழ்த்தினார்.இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,.1, பொன்னமராவதி தாலுகா, கண்டியாநத்தம் ஊராட்சி, தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் ஏழை,எளிய மக்கள் சுமார் 300 நபர்கள் கேசராப்பட்டி அஞ்சல் அலுவலகத்தில் பணம் செலுத்தி பாதிப்புக்குள்ளான புகார் தொடர்பாக மாவட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டுதல்.2,பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்திட தமிழக அரசுக்கு கோரிக்கை.3, தொழில்வளம் பின் தங்கிய பொன்னமராவதி தாலுகாவில் தொழிற்சாலைகள் உருவாக்குவதற்கு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் ஆவண செய்ய கோரிக்கை.4 ,புதுக்கோட்டை, பொன்னமராவதி, சிங்கம்புனரி, நத்தம் வழியாக ரயில் பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுதல்., இக்கூட்டத்தில் கண்ணுச்சாமி, சுமதி, பாக்கியலெட்சுமி, பம்பையன், காடன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.5, பொன்னமராவதி தாலுகாவில் அனைத்து கிராமங்களிலும் ABGP தேசிய நுகர்வோர் அமைப்பின் கிளைகள் அமைப்பது,முடிவில் சதீஸ்குமார் நன்றி கூறினார்.