ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் 15-08-2025 வெள்ளி கிழமை சீதா கல்யாண மண்டபத்தில் அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து ABGP தென் மாநில நிர்வாகிகள் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.இந் நிகழ்வில் தென் பாரத அமைப்பு செயலாளர் திரு ஸ்ரீ M.N.சுந்தர் ஜீ அவர்களும் அமைப்பின் தேசிய இனை செயலாளர் வழக்கறிஞர் ஸ்ரீ விவேகானந்தன் ஜீ அவர்களும் தென் பாரத இனை அமைப்பு செயலாளர் ஸ்ரீ சத்யபாலன் ஜீ அவர்களும் தென் மாநில தலைவர் ஸ்ரீ தமிழ்மணிமுத்துவேலப்பன் அவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் மற்றும் ஆயம் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திரு சுந்தர்ஜி அவர்கள் மாநிலத்தில் அமைப்பு விரிவாக்கம் பற்றியும் கிளை செயல்பாடுகளை மேம்படுத்தல் பற்றியும் நிர்வாகிகளுக்கு ஆலோசகர் வழங்கினார்.பின்னும் திரு விவேகானந்தன் ஜீ அவர்கள் மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் அமைப்பு செயல்பாடுகளை மேம்படுத்தல் பற்றியும் செயல்பாடில்லாத மாவட்டத்தில் கிளைகள் செயல்படவும்.கிளையே இல்லாத மாவட்டங்களில் கிளை உருவாக்கமும் செய்ய ஆலோசனை வழங்கினார்கனார் பின்னர் சாந்தி மந்திரத்துடன் மாலை 4 அளவில் இனிதே முடிவுற்றது.பிறகு மாநில நிர்வாகிகள் மற்றும் கோபி கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு அனைவருக்கும் ராக்கி கட்டி மற்றும் இனிப்பு வழங்கி ரக்க்ஷாபந்தன்விழா கொண்டாடப்பட்டது.

Bydrrramesh

Aug 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

ABGP தேசிய நுகர்வோர் அமைப்பு 28-09-2025புதுக்கோட்டை மாவட்டம், அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் பொன்னமராவதி தாலுகா கிளை கூட்டம் கண்டியாநத்தம் ஊராட்சியில் இன்று 28-09-2025 காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற்றது. இகூட்டத்திற்கு தாலுகா ஒருங்கிணைப்பாளர் மலைச்சாமி தலைமை வகித்தார். ஆண்டியப்பன், ராஜேந்திரன், அழகு, அருன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்.மாநில இணை செயலாளர் செல்.கனகராஜ் அமைப்பின் செயல்கள் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து உரை நிகழ்த்தினார்.இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,.1, பொன்னமராவதி தாலுகா, கண்டியாநத்தம் ஊராட்சி, தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் ஏழை,எளிய மக்கள் சுமார் 300 நபர்கள் கேசராப்பட்டி அஞ்சல் அலுவலகத்தில் பணம் செலுத்தி பாதிப்புக்குள்ளான புகார் தொடர்பாக மாவட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டுதல்.2,பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்திட தமிழக அரசுக்கு கோரிக்கை.3, தொழில்வளம் பின் தங்கிய பொன்னமராவதி தாலுகாவில் தொழிற்சாலைகள் உருவாக்குவதற்கு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் ஆவண செய்ய கோரிக்கை.4 ,புதுக்கோட்டை, பொன்னமராவதி, சிங்கம்புனரி, நத்தம் வழியாக ரயில் பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுதல்., இக்கூட்டத்தில் கண்ணுச்சாமி, சுமதி, பாக்கியலெட்சுமி, பம்பையன், காடன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.5, பொன்னமராவதி தாலுகாவில் அனைத்து கிராமங்களிலும் ABGP தேசிய நுகர்வோர் அமைப்பின் கிளைகள் அமைப்பது,முடிவில் சதீஸ்குமார் நன்றி கூறினார்.