Author: drrramesh

திருவண்ணாமலை ரயில் நிலையம், ரயில் முனையமாக மாற்றப்பட்டு அதிக ரயில்கள், பக்தர்களின் பயணத்துக்கு வழிவகுக்க, “தேவை திருவண்ணாமலை ரயில் முனையம் ” என்ற ABGPகையெழுத்து இயக்கம் துவக்கிட முடிவெடுத்து ஜூலை 11 அன்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இந்த கூட்டத்தில் தலைவர் திரு.ரோஷன் லால், இணை செயலாளர் திரு.சம்பத், தென்பாரத ஏபிஜிபி அமைப்பு செயலாளர் திரு.எம்.என்.சுந்தர் ஜி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா பள்ளிபாளையம் பகுதியில் காவிரி நதியை சூழ்ந்து இருந்த ஆகாய தாமரையை அகற்றும் பணி நமது அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து சார்பில் இப்பகுதி பொதுமக்களை ஒருங்கிணைத்து ஆகாயத்தாமரை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது மேலும் இதே போன்று பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய படித்துறையில் இவ்வாறு ஆகாயத்தாமரை பள்ளிபாளையம் முழுவதும் பல்வேறு படித்துறையில் ஆக்கிரமிப்பு செய்துள்ளது எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு தனி கவனம் மேற்கொண்டு இதை சரி செய்வதற்கு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் அனைவரும் ஒன்றுபடுவோம் சுற்றுச்சூழலையும் நீர் நிலைகளில் பாதுகாப்போம் ABGP🙏நாமக்கல் மாவட்டம் மு.சபரிநாதன்

நீண்ட நாளாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா பள்ளிபாளையம் காவேரி ஆர் எஸ் பகுதியில் வேகத்தடை இன்றி பொதுமக்கள் பல இன்னலுக்கு ஆளாகினார்கள் அதை சரி செய்ய வேண்டுமென்ற பொது மக்களின் கோரிக்கை கனவு இன்று நினைவாகியுள்ளது இதேபோன்று பொதுமக்கள் அதிகளவு செல்லும் பகுதியில் ஆபத்து நிறைந்த பகுதி என்றால் அங்கு வேகத்தடை அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொற்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து பள்ளிபாளையம 🙏🙏🙏🙏 நாமக்கல் மாவட்டம்

தமிழக ஏபிஜிபி நுகர்வோர் அமைப்பின் சார்பாக ரயில்வே மந்திரிக்கு டெல்லி ரயில் பவனில் இன்று ஜூன் 30 அன்று மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் அகில பாரத அளவில் செயல்படுத்தப்பட வேண்டிய 3 கோரிக்கைகளும் தமிழகத்தில் செயல்படுத்த வேண்டி 6 கோரிக்கைகளும் அளிக்கப்பட்டது. அகில பாரத கோரிக்கைகளாவது.1. ராஜதானி, துரந்தோ மற்றும் சதாப்தி ஆகிய பிரீமியம் ரயில்களில் படிப்படியாக அதிகரிக்கும் டிக்கெட் கட்டணமான பிரீமியம் தத்கால் முறையை விலக்கிக் கொள்ள வேண்டும். 2. ரயில் பயணிகளுக்கான முன்பதிவில் கடைசியாக ரயில்வே மூலம் நிச்சயிக்கப்பட்ட அட்டவணையை வெளியிடும்போதுகூட காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட்டுகளுக்கு “ரத்து கட்டணம் ” வசூலிக்கப்படுவதை நிறுத்த வேண்டும் .3. அனைத்து ரயில்களிலும் அனைத்து வகுப்பு பெட்டிகளிலும் தற்போது உள்ள ஒரு மேற்கத்திய கழிவறை மூன்று இந்திய கழிவறை என்ற முறையை மாற்றி இரண்டு மேற்கத்திய கழிவறை மற்றும் இரண்டு இந்திய கழிவறை உடைய வடிவமைப்பை உருவாக்க வேண்டும். தமிழகத்திற்கான கோரிக்கைகளாக 1. அதிகமான மெமூ ரயில்களை இயக்கும் வகையில் மதுரையில் மெமூ ஷெட் அமைக்க வேண்டும். 2. .திருவண்ணாமலை ரயில் நிலையத்தை ஒரு டெர்மினல் ஆக உருவாக்குவது மூலம் அதிக ரயில்களை திருவண்ணாமலைக்கு இயக்க கோரிக்கை. 3. சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் இடையே பகல் நேரத்தில் அம்ருத் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க வேண்டும். 4. தற்போது திருச்சியில் இருந்து காரைக்குடிக்கும் காரைக்குடியில் இருந்து விருதுநகருக்கும் உள்ள ரயிலை இணைத்து தூத்துக்குடி வரை அந்த ரயிலை நீடித்து திருச்சிக்கும் தூத்துக்குடிக்கும் ஒரு புதிய ரயிலை இயக்க வேண்டும். 5.திருவனந்தபுரம் வடக்கு அல்லது கொல்லத்தில் இருந்து புனலூர் தென்காசி ராஜபாளையம் மதுரை பழனி கோயம்புத்தூர் திருப்பூர் வழியாக சேலம் அல்லது ஈரோடுக்கு ஒரு ரயிலை விட வேண்டும் 6. புதுச்சேரியில் சி டி ஓ (CDO) நிறுவுதல் தேவை. மற்றும் புதுச்சேரிக்கும் காரைக்காலுக்கும் இடையே பேரளம் திருநள்ளார் வழியாக ஒரு ரயிலை விட வேண்டும் மற்றும் மைசூர் – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் புதுச்சேரி வரை நீட்டிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து ஏ பி ஜி பி நுகர்வோர் அமைப்பின் சார்பாக அகில பாரத இணை செயலாளர் எம். விவேகானந்தன் மற்றும் தென் பாரத அமைப்பு செயலாளர் எம். என். சுந்தர் அவர்களும் மத்திய ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ்வின் டெல்லியில் உள்ள ரயில் பவன் அலுவலகத்தில் அளித்தனர்.

டெல்லியில் ரயில்வே அமைச்சரிடம், தமிழக ABGP சார்பில் மனு சமர்ப்பிக்க சென்றABGP நிர்வாகிகள், திரு.M.N. சுந்தர் ஜி, தென் மாநிலங்களின் அமைப்பு செயலாளர்,மற்றும் திரு.M. விவேகானந்தன்ஜி, அகில பாரத இணை செயலாளர்.

அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து தஞ்சாவூர் கிளை உறுப்பினர் சந்திப்பு கூட்டம் 28/06/25 மாலை 6.30 முதல் 8.00 மணி வரை தஞ்சை கலைவாணி மன்றத்தில் துணைத் தலைவர் ஜெகஜீவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தமிழ்நாட்டில் இந்திய ரயில்வேதுறை பயணியர்களுக்கு செய்யும் சேவைகளில் ஏபிஜிபியின் பங்கு குறித்து விவாதிக்கப் பட்டது. தஞ்சாவூர் விழுப்புரம் இரட்டை ரயில் பாதை விரைவில் அமைக்க ரயில்வே அதிகாரிகளுக்கு மீண்டும் கோரிக்கை மனு அனுப்ப முடிவெடுக்கப்பட்டது மதுரையில் கடந்த 22/06/25 நடந்த தென் தமிழ்நாடு நிர்வாகிகள் கூட்டத்தில்,திரு விவேகானந்தன் ஜி தேசிய இணைச் செயலாளர் அவர்கள் தலைமையில் நடந்தபோது, நம் இயக்கத்தின் பாடல் பாடிய பின் ,பக்கத்து மாவட்டங்களில், தாலுகாக்களில் நமது நுகர்வோர் இயக்க கிளை விரிவாக்கம் குறித்து திரு விவேகானந்தன் ஜி, திரு சத்தியபாலன் ஜி தென் தமிழ்நாடு அமைப்பாளர் அவர்கள் வழங்கிய ஆலோசனைகள் பற்றி ஜெகஜீவன்ஜி துணைத் தலைவர் தென் தமிழ்நாடு விரிவாக விளக்கி பேசினார்.அனைவரும் ஏபிஜிபி கிளை வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதி அளித்தார்கள்.அடுத்த கூட்டம் ஜுலை மூன்றாம் சனிக்கிழமை19/07/25 அன்று நடைபெறும் என்று தீர்மானிக்கப் பட்டது.

அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் விழிப்புணர்வு அமைப்பு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் மாதாந்திர கூட்டம் ஜூன் 28ஆம் தேதி சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தேனி அறிமுகக் கூட்டம் இன்று ஜூன் 28ஆம் தேதி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.மேலும் இந்த கூட்டத்தில் அடுத்த அறிமுகக் கூட்டம் பெரிய அளவில் ஜூலை 26ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டது.

அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் ஆலோசனை கூட்டம்நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா குமாரபாளையம் பகுதியில் இன்று நடைபெற்றது. இதில் நமது அமைப்பை மேலும் வலுப்படுத்தவும் நடைபெற இருக்கும் முருக பக்தர் மாநாட்டில் நமது அமைப்பிலிருந்து மாநாட்டிற்கு செல்வது சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டு முருக பக்தர்களை இந்த மாநாட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. நடைபெற இருக்கும் முருக பக்தர் மாநாட்டிற்கு இரண்டு வாகனங்கள் மூலம் நமது உறுப்பினர்களை அழைத்துச் செல்வது என்று முடிவு செய்யப்பட்டது இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் சபரிநாதன் குமாரபாளையம் பொறுப்பாளர் ராஜேந்திரன் தங்கவேல் ஜெகதீசன் உதயசூரியன் வாசுதேவன் மாதேஸ்வரன் பாலகிருஷ்ணன் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.