Category: MEMBERSHIP

ரயில் நிறுத்தம் கேட்டு ரயில்வே பொதுமேலாளருக்கு ABGP மூலமாக வேண்டுகோள் …

திருநெல்வேலி அருகில் செய்துங்கநல்லூர் & திருவண்ணாமலை அருகில் போளூர் ஸ்டேஷனில் ரயில் நிறுத்தம் கேட்டு ரயில்வே பொதுமேலாளருக்கு ABGP மூலமாக வேண்டுகோள் 11/12/2025 அன்று சென்னையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து (ABGP) தேசிய நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் மாநில பயிற்சி முகாம்….

மாநில பயிற்சி முகாமில் மாநில ஊடகப் பிரிவு பொறுப்பாளர் திரு ரமேஷ் அவர்கள் பயிற்சி முகாமுக்கு வந்து கலந்து கொண்ட தேசிய,மாநில, மாவட்ட பொறுப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து,நிகழ்ச்சியின் இறுதியில் நன்றியுரை ஆற்றினார்.

அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து மாநில பயிற்சி முகாம் தென் தமிழ்நாடு.

தென் தமிழக மாநில செயலாளர் திரு. ஜெயபாலன் அவர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த அமர்வை தொடங்கி வைத்து வழி நடத்தினார்.

அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து (ABGP) தென் தமிழகம்.மாநில பயிற்சி முகாம்.

கோவை மாவட்டம் ஆர் எஸ் புரம் பகுதியில் அமைந்துள்ள சேவாஸ்ரமத்தில் நடைபெற்ற மாநில பயிற்சி முகாமுக்கு தென் பாரத அமைப்புச் செயலாளர் திரு எம். என் சுந்தர் ஜி அவர்கள் தலைமை தாங்கினார்.

அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து தஞ்சாவூர் கிளையின் ஜூலை மாத உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம் 19/07/25 சனிக்கிழமை தஞ்சை கலைவாணி மன்றத்தில் தஞ்சை செயற் குழு உறுப்பினர்கள் திரு N D நாகராஜன், திரு சுப்பாராவ் அவர்களின் ஏற்பாட்டில் திரு ஜெகஜீவன் துணைத் தலைவர் தலைமையில் மாலை 6.30 க்கு தொடங்கி 8.00 மணி வரை நடைபெற்றது கூட்டத்தில்,வங்கிகள் தங்க நகைக் கடன் வழங்கும் போது (RBI )ரிசர்வ் வங்கியின் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் விவரமாக தனது Facebook பதிவில் தென் தமிழ்நாடு ஏபிஜிபி தலைவர் திரு தமிழ்மணி ஜி Tamilmani Muthuvelappan வெளியிட்டிருந்த குறிப்புகளை உறுப்பினர்களுக்கு விளக்கி கூறினார் திரு ஜெகஜீவன் அவர்கள்.மேலும் வங்கிகள் தொழில் முனைவோர்களுக்கு வழங்கி வரும் முத்ரா கடன் பெற யாரை, எங்கே, எப்படி அணுகுவது பற்றிய விதிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப் பட்டது.(உங்கள் அருகிலுள்ள எந்த ஒரு பொதுத் துறை வங்கி, தனியார் வங்கி,கிராம வங்கி, NBFC (non banking finance company), அல்லது மைக்ரோ நிதி நிறுவனம் (MFI) ஆகியவற்றை நேரில் அல்லது ஆன்லைனில் அணுகலாம்.)மேலும் cashless health insurance policy எடுத்து மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேரும் போது ஒரு சில மருத்துவ மனைகளில் கடடணக்கொள்ளை கள் நடந்து வருவது குறித்து விழிப்புணர்வு செய்தி பகிரப்பட்டது.திரு கனகராஜன் ஜி ஆர்எஸ்எஸ் தஞ்சாவூர் சங்ககாலக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.ஆகஸ்ட் மாதம் ரக்ஷா பந்தன் விழா தஞ்சையில் சிறப்பாக கொண்டாட திட்டமிடப் பட்டது.ஜெகஜீவன் Jagajeevan Saminathan துணைத் தலைவர், ஏபிஜிபி, தஞ்சாவூர்.9443885853.

ஜூலை 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை கோயம்புத்தூர் மாநகர் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது கீழ்க்கண்ட விஷயங்கள் தீர்மானிக்கப்பட்டது.

1.மாநகராட்சி வார்டு உறுப்பினரின் செயல்பாடுகள் என்ன என்று RTI மனு. 2.108 ஆம்புலன்ஸ் செயல்பாடுகள் என்ன என்று RTI மனு. 3.ஆகஸ்ட 9ஆம் தேதி வரும் ரக்ஷா பந்தன் விழாவில் குழுவாக பிரிந்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊடகத் துறையில் உள்ளவர்களை…