ABGP நாகை மாவட்ட செய்திகள்…

பெறுநர்; உயர் திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகப்பட்டினம்.ஐயா; வணக்கம் நாகப்பட்டினம் மாவட்டம் அகில பாரதிய க்ரஹக் பஞ்சாயத்துடன் (ABGP) இணைந்து அகில பாரதிய நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கடந்த சனிக்கிழமை 25/10/2025 அன்று கூட்டம்…

அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து கோபிசெட்டிபாளையம்..

ABGP கோபிசெட்டிபாளையம் கிளையின் மாதாந்திர கூட்டம் 25/9/2025 தேதி நடைபெற்றது.இதில் நவம்பர் 9 ஆம் தேதி கோவையில் நடைபெறும் பயிற்சி முகாமில் அதிக அளவு உறுப்பினர்கள் கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

ABGP தேசிய நுகர்வோர் அமைப்பு 28-09-2025புதுக்கோட்டை மாவட்டம், அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் பொன்னமராவதி தாலுகா கிளை கூட்டம் கண்டியாநத்தம் ஊராட்சியில் இன்று 28-09-2025 காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற்றது. இகூட்டத்திற்கு தாலுகா ஒருங்கிணைப்பாளர் மலைச்சாமி தலைமை வகித்தார். ஆண்டியப்பன், ராஜேந்திரன், அழகு, அருன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்.மாநில இணை செயலாளர் செல்.கனகராஜ் அமைப்பின் செயல்கள் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து உரை நிகழ்த்தினார்.இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,.1, பொன்னமராவதி தாலுகா, கண்டியாநத்தம் ஊராட்சி, தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் ஏழை,எளிய மக்கள் சுமார் 300 நபர்கள் கேசராப்பட்டி அஞ்சல் அலுவலகத்தில் பணம் செலுத்தி பாதிப்புக்குள்ளான புகார் தொடர்பாக மாவட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டுதல்.2,பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்திட தமிழக அரசுக்கு கோரிக்கை.3, தொழில்வளம் பின் தங்கிய பொன்னமராவதி தாலுகாவில் தொழிற்சாலைகள் உருவாக்குவதற்கு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் ஆவண செய்ய கோரிக்கை.4 ,புதுக்கோட்டை, பொன்னமராவதி, சிங்கம்புனரி, நத்தம் வழியாக ரயில் பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுதல்., இக்கூட்டத்தில் கண்ணுச்சாமி, சுமதி, பாக்கியலெட்சுமி, பம்பையன், காடன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.5, பொன்னமராவதி தாலுகாவில் அனைத்து கிராமங்களிலும் ABGP தேசிய நுகர்வோர் அமைப்பின் கிளைகள் அமைப்பது,முடிவில் சதீஸ்குமார் நன்றி கூறினார்.

அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து

,அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து, தஞ்சாவூர் மாவட்டம் செப்டம்பர் 2025 மாத கூட்டம் தஞ்சை கலைவாணி மன்றத்தில் 27/09/25 ,மாலை இனிதே நடைபெற்றது.திரு சீனிவாசன் ஜி துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் திரு N D நாகராஜன் தஞ்சை நகர் நிர்வாகிகள் ஏற்பாடு…

அகில பாரத க்ராஹக் பஞ்சாயத்து. ஆகஸ்ட் 23 & 24 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை திருச்சிராப்பள்ளியில் நடந்த விவசாய கண்காட்சியில் நமது ABGP சார்பில் மாநில மகளிர் விழிப்புணர்வு பிரிவு பொறுப்பாளர் திருமதி.V.சண்முகப்பிரியா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.பாலதண்டாயுதம் நம்முடைய நுகர்வோர் அமைப்பை பற்றி மக்களிடம் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.