அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் விழிப்புணர்வு அமைப்பு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் மாதாந்திர கூட்டம் ஜூன் 28ஆம் தேதி சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தேனி அறிமுகக் கூட்டம் இன்று ஜூன் 28ஆம் தேதி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.மேலும் இந்த கூட்டத்தில் அடுத்த அறிமுகக் கூட்டம் பெரிய அளவில் ஜூலை 26ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டது.

அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் ஆலோசனை கூட்டம்நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா குமாரபாளையம் பகுதியில் இன்று நடைபெற்றது. இதில் நமது அமைப்பை மேலும் வலுப்படுத்தவும் நடைபெற இருக்கும் முருக பக்தர் மாநாட்டில் நமது அமைப்பிலிருந்து மாநாட்டிற்கு செல்வது சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டு முருக பக்தர்களை இந்த மாநாட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. நடைபெற இருக்கும் முருக பக்தர் மாநாட்டிற்கு இரண்டு வாகனங்கள் மூலம் நமது உறுப்பினர்களை அழைத்துச் செல்வது என்று முடிவு செய்யப்பட்டது இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் சபரிநாதன் குமாரபாளையம் பொறுப்பாளர் ராஜேந்திரன் தங்கவேல் ஜெகதீசன் உதயசூரியன் வாசுதேவன் மாதேஸ்வரன் பாலகிருஷ்ணன் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் அமைப்பின் மாதாந்திர கூட்டம் (ABGP) புதுக்கோட்டையில் இன்று ஜூன் 14ஆம் தேதி சனிக்கிழமை மாநில இணை செயலாளர் திரு செல்.கனகராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் அமைப்பின் திருச்சி மாவட்டம் ஸ்ரீ ரங்கத்தில் இன்று ஜூன் 9ஆம் தேதி திங்கட்கிழமை மாலை மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.

ABGP கோவை மாவட்ட மாதாந்திர கூட்டம்1/6/2025 அன்று RS புரம் சேவாஆசிரமத்ததில் நடைபெற்றது. இதில் மாநில வல்லுநர் குழு பொறுப்பாளர் திரு.குலோத்துங்க மணியன் சிறப்புரை ஆற்றினார். மேலும் மாநில பிரச்சாரம் மற்றும் ஊடகப்பிரிவு பொறுப்பாளர் திரு.இரா.இரமேஷ் , கோவை கன்வினர் திரு.பாலமுருகன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ABGP நாகப்பட்டினம் மாதாந்திர கூட்டம் மே மாதம் 31ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற்றது இந்த கூட்டத்தில் வேளாங்கண்ணி நாகப்பட்டினம்,காரைக்கால், பேரளம், திருநள்ளாறு வழியாக தென்னக ரயில்வே சோதனை ஓட்டம் நடைபெற்றது முன்னிட்டு தென்னக ரயில்வே துறைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஏபிஜிபி 51ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி திரளான பொதுமக்கள் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் நுகர்வோர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது…

ஏபிஜிபி 51ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி திரளான பொதுமக்கள் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் நுகர்வோர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது புதுச்சேரி குயவர்பாளையம் லெனின் வீதியில் உள்ள கீர்த்தி மஹாலில் அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து ABGP நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கத்தின் 51ம்…

ஏடிஎம் சேவையை தொடங்கிய SBI…

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் பகுதியில் உள்ள SBI வங்கி ஏடிஎம் சேவை தற்காலிகமாக பல நாட்களாக அப்பகுதி ரோடு வேலை நடைபெற்று வந்த காரணத்தினால் பல மாதங்களாக ஏடிஎம் சேவை குறைபாடு இருந்ததாக பொதுமக்கள் வாயிலாக ABGP அமைப்படும்…